தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக 2 அமெரிக்க மருத்துவ பேராசிரியர்களுக்கு நோபல் பரிசு

Advertisement

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவை சேர்ந்த 2 மருத்துவ பேராசிரியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் விக்டர் அம்ப்ரோஸ். அதே போல் ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் கேரி ருவ்குன். இவர்கள் இருவரும் இந்தாண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என நோபல் கமிட்டி நேற்று அறிவித்துள்ளது. மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக அம்ப்ரோசுக்கும், ருவ்கினுக்கும் இப்பரிசு வழங்கப்படுகிறது.

பரிசு வென்றவர்களுக்கு தங்க பதக்கத்துடன் 10 லட்சம் டாலர் (ரூ.8.39 கோடி)பரிசு தொகை வழங்கப்படுகிறது. கடந்த 1901 ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை கவுரவிக்கும் வகையில் ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அவரது நினைவுதினமான டிசம்பா் 10-ம் தேதி இந்த பரிசு வழங்கப்படும். இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்றும்,வேதியலுக்கான நோபல் நாளையும், இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்கான விருது நாளை மறுநாளும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு 11ம் தேதி அறிவிக்கப்படும்.

 

Advertisement