Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் அரபி மதரஸாக்களை குறிவைக்கும் என்ஐஏ நடவடிக்கை அநீதியானது: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தமிழக அரபிக் கல்லூரிகளை குறிவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அநீதியானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பதாகக் கூறி, அரபி மதரஸாக்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து, அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதாக என்ஐஏ மீது குற்றம் சாட்டப்படுகிறது. தமிழக சிறுபான்மை இளைஞர்களை குறிவைக்கும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு நீதி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.