தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய தொழில்நுட்ப முறையில் திராட்சை பயிரிட்டு பயன் பெறலாம்

*விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Advertisement

கிருஷ்ணகிரி : புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து விவசாயிகள் பயனடைய வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பையூரில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து, திராட்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாமினை நடத்தியது.

இம்முகாமினை கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும், நவீன திராட்சை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கலெக்டர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலைத்துறையில் பெயர்பெற்ற ஒரு மாவட்டம். பல்வேறு பயிர்களை சிறப்பாக பயிரிடக்கூடிய ஒரு சிறந்த மாவட்டமாகும். திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து பயன்பெறலாம். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து நடத்திய திராட்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.

அதே போல், தமிழ்நாட்டிலேயே தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் திராட்சை அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் முக்கியமான பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உதவியுடன், பையூர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மாதிரி திராட்சை சோதனை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 11 வகையான திராட்சை ரக செடிகள் வைத்துள்ளனர். இந்தியாவில், திராட்சை ஏற்றுமதி மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

திராட்சையை பொறுத்தவரை 16 எம்எம் இருந்தால் தான், அவை ஏற்றுமதிக்கு உகந்ததாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திராட்சை சாகுபடி குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, 11 வகையான திராட்சை ரகங்கள் செடி வளர்ப்பு பணிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் இந்திரா, தோட்டக்கலைத்துறை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அனிசா ராணி, பிராந்திய மேலாளர் ஷோபனா குமார், பேராசிரியர்கள் செந்தமிழ் செல்வி, ஸ்ரீ வித்யா, திலகம், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணவேனி மற்றும் விவசாயிகள், தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News