தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை; 5 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்

Advertisement

நெல்லை: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள், 350 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் கடற்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரையும், அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வரை வீச கூடும். மேலும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்களில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தருவைகுளம், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், புன்னக்காயல், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதே போல வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் உள்ளிட்டவையும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதுபோல நெல்லை மாவட்டம் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, கூடங்குளம், கூத்தங்குளி, பெருமணல், பஞ்சல், தேமையார்நகர், ஜார்ஜ் நகர், மிக்கேல்நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் நாட்டுபடகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், மீன்துறையும் அறிவித்துள்ளது.

Advertisement

Related News