தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெல்லை ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல்; கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்: 6 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Advertisement

நெல்லை: நெல்லையில் ஜல் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை என்ன? என விளக்கம் கேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லை, புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் ஜல் நீட் பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் வார்டனாக பணி புரிந்த அமீர் உசேன் என்பவர் கடந்த அக்.1ம் தேதி, நீட் பயிற்சி மைய மாணவர்கள் அடித்து கொடுமைப்படுத்தப்படுவதாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

இதற்கிடையே நீட் பயிற்சி மைய உரிமையாளர் மாணவர்களை பிரம்பால் தாக்கி விரட்டுவதும், மாணவி ஒருவர் மீது செருப்பை தூக்கி வீசி எறியும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது மனித உரிமை ஆணைய மனுக்கள் குறித்த விசாரணைக்காக நெல்லையில் முகாமிட்டிருந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 18ம் தேதி நீட் பயிற்சி மையத்திற்கு நேரடியாக சென்று, அங்கு மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் நீட் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு நெல்லை கலெக்டர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், நெல்லை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் பயிற்சி மையத்தில் விடுதி செயல்பட்டு வந்துள்ளது. அதற்கு அனுமதி பெறப்பட்டதா, அங்கு மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினரா என்பதன் அடிப்படையில் இந்த வழக்கில் மாநகராட்சி கமிஷனரும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement