வாக்காளர் சிறப்பு திருத்தம் கொண்டு வந்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
கே.டி.சி.நகர் : வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்ததேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரகாம்பெல் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் நாங்குநேரி ரூபி மனோகரன் எம்எல்ஏ, மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் டிபிஎம் மைதீன்கான், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், மாநகர பொறுப்பாளர்கள் மேற்கு சுப்பிரமணியன், கிழக்கு தினேஷ், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கேஆர் ராஜூ, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்பி ஞானதிரவியம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏஎல்எஸ் லட்சுமணன், வக்கீல் பிரபாகரன், பேச்சிபாண்டியன்,
சித்திக், முன்னாள் மேயர் பிஎம் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ ஐயப்பன், நடராஜன், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் ராஜா முகம்மது, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், சங்கர், நமச்சிவாயம் கோபி, வக்கீல் சங்கர், அண்டன் செல்லத்துரை, துபை சாகுல், சாமுவேல், மாவட்ட துணை செயலாளர்கள் மத்தி தர்மன், எஸ்வி சுரேஷ், கிரிஜாகுமார், கிழக்கு வள்ளியூர் நம்பி, சிறுபான்மை பிரிவு முகமதுஅலி, மண்டல தலைவர்கள் பாளை பிரான்சிஸ், மேலப்பாளையம் கதீஜா இக்லாம் பாசிலா,
தச்சை ரேவதி பிரபு, டவுன் மகேஸ்வரி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் வடக்கு அலெக்ஸ் அப்பாவு, மானூர் அன்பழகன், பாளை. மத்தி போர்வேல் கணேசன், வடக்கு வேலங்குளம் கண்ணன், தெற்கு சுபாஷ் தங்கபாண்டியன், யூனியன் சேர்மன்கள் பாளை. முரளிதரன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, வள்ளியூர் ராஜா ஞானதிரவியம், மாநில அமைப்புசாரா தொமுச அமைப்புச் செயலாளர் சைபுதீன், மேற்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி,
கிழக்கு மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன், மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் காமினிதேவன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அலிப் மீரான், பலராமன், வக்கீல் அருள்ராஜ், வின்ஸ்டர், மாநகர துணைச் செயலாளர் பிரபு பாண்டியன், தாழையூத்து பஞ். தலைவர் மற்றும் மானூர் யூனியன் பஞ். தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர் பீர்முகைதீன், இளைஞரணி முக்கூடல் நயினார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி என்ற செல்வம், குண்டு பாண்டியன், மத்திய மாவட்ட பொருளாளர் வண்ணை சேகர்,
கட்சியின் மூத்த முன்னோடி ஐஸ் மூக்கன், மாநகர பொருளாளர் பூக்கடை அண்ணாத்துரை, மகளிரணி சவுந்தரம் முத்துராஜ், அனிதா, ரேவதி அசோக், ராஜகுமாரி, மல்லிகா அருள், கிழக்கு மாவட்ட மகளிரணி தொண்டரணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் ஊராட்சி தலைவருமான அனுராதா ரவிமுருகன், மாநகர கவுன்சிலர்கள் ரம்ஜான்அலி, கந்தன், அலிஷேக் மன்சூர், சகாய ஜூலியட் மேரி, சின்னத்தாய் கிருஷ்ணன், மன்சூர்,
மாரியப்பன், பிரபாசங்கரி, ஒன்றிய கவுன்சிலர்கள் திவாகரன், கோசிஜின் பால், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், எல்ஐசி பேச்சிமுத்து, அறங்காவலர் குழு வெயிலப்பன், மாவட்ட பிரதிநிதிகள் செல்லகோபால், மாரிச்சாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மின்வாரிய தொமுச நடராஜன், கேடிசி பாலா, பேரங்காடி ஐயப்பன், வக்கீல் அணி ஜாகீர் உசேன், வட்டச்செயலாளர்கள் அந்தோணி, பேபி கோபால், மேகை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்ஐஆர் தில்லுமுல்லுகளை தடுத்து முறியடிப்போம்
ஆவுடையப்பன் வேண்டுகோள்
நெல்லையில் நடந்த திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசியதாவது:தேர்தல் ஆணையம் பா.ஜ.வின் கைக்கூலியாக செயல்பட்டு எஸ்ஐஆர் என்ற பெயரில் மோசடி வேலையில் இறங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இந்த அவசரம்? ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்குகளை திருட முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக திமுக கூட்டணி கட்சித் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் தில்லுமுல்லுகளை தொண்டர்கள் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, ஏஐசிசி உறுப்பினர் காமராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சிவனுபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர், வட்டார காங். தலைவர்கள் பாளை மேற்கு கணேசன், களக்காடு தெற்கு அலெக்ஸ், துணை தலைவர் தியாக சுரேஷ், நாங்குநேரி சசிகுமார், தச்சை கெங்காராஜ், ஆசாத் பாதுஷா மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கேஎம்ஏ நிஜாம்,
இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதுஅலி, துணை செயலாளர் மணப்படை மணி, தலைமை ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ராணி செல்வின், புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் உவரி ரைமண்ட், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் சடையப்பன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் எல்கேஎஸ் மீரான் மைதீ்ன், பாட்டப்பத்து முகமதுஅலி, இளைஞரணி முகம்மது கடாபி, முன்னாள் எம்எல்ஏ கோதர்மைதீன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் அருள்செல்வன்,
சேகர், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்ப்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன், ஆட்டோகாஜா, எஸ்டிபிஐ சாகுல்ஹமீது, மனித நேய ஜனநாயக கட்சி அலிப்பிலால், பாளை பாரூக், அகில இந்திய பார்வர்டு பிளாக் கொம்பையா பாண்டியன், மாநகர செயலாளர் மணி, மக்கள் நீதி மய்யம் டாக்டர் பிரேம்நாத், மாவட்ட தி.க. செயலாளர் ராஜேந்திரன், தமிழக வாழ்வுரிமை கட்சி உமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
