தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இயற்கை எழிலுடன் ஆண்டு முழுவதும் ஆர்ப்பரிப்பு ஆளை அசத்தும் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி

Advertisement

மூணாறு : மூணாறு அருகே ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ள ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தென்மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிகவும் பிரபலமானதாகும்.

மூணாறின் ஸ்பெஷல் பச்சைப்பசேல் தேயிலைத் தோட்டங்களும் குளுமையும்தான். நல்லதண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டளை ஆறு என்ற மூன்று ஆறுகளும் சங்கமிப்பதால் இப்பகுதிக்கு மூணாறு என்று பெயர் வந்தது.

இந்த மூன்று ஆறுகள் சங்கமித்து ஒன்றாக சேர்ந்து பாயும் நீர்வீழ்ச்சி தான் ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி. பச்சைப்பசேல் என்று காணப்படும் தேயிலைத் தோட்டங்களுக்கும், மலைக் குன்றுகளுக்கும் இடையே வெள்ளியை உருகி ஓடுவதுபோல் நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது.

ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சி இயற்கையான வசீகரம் மற்றும் அழகு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. மூணாறு மற்றும் பள்ளிவாசல் இடையே இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. ஆற்றுக்காடு நீர்வீழ்ச்சியானது அதன் நீண்ட மலையேற்றப் பாதைக்கு புகழ்பெற்றது.

மூணாறில் இருந்து சுமார் 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மாட்டுப்பட்டி, ஹெட் ஒர்க்ஸ் போன்ற அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Advertisement

Related News