தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதிய தேசிய கல்வி கொள்கையை அங்கீகரித்த மராட்டிய அரசு: பள்ளி படிப்பில் 3வது மொழியாக இந்தி கட்டாயம்!!

Advertisement

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல், 1 - 5 வகுப்புகளுக்கு இந்தி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய கல்விக்கொள்கை 2020ன் ஒரு பகுதியாக, பள்ளி படிப்பில் இந்தி மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT, பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும். பழைய பாடத்திட்டத்தில் இருந்து புதிய பாடத் திட்டத்திற்கு மாறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய 'Holistic Progress Card' (HPC) அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News