தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெகமம் அருகே கை, கால்களை கட்டி போட்டு சிறுவன் இரும்பு பைப்பால் அடித்து சித்ரவதை

Advertisement

*இந்து முன்னணி செயலாளர் உள்பட 3 பேர் கைது

கிணத்துக்கடவு : நெகமம் அருகே கை, கால்களை கட்டி போட்டு சிறுவனை இரும்பு பைப்பால் தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை அடுத்த நெகமத்தை சேர்ந்தவர் தனபால். கறிக்கடை உரிமையாளர். இவரது கடையில் வட மாநிலத்தை சேர்ந்த ரோகித் (17) வேலை செய்து வருகிறார். இவர், அங்குள்ள தர்சன் என்பவரின் ஓட்டலில், ரூ.10 ஆயிரம் திருடிவிட்டதாக, தர்சன் தனது சித்தப்பாவும், இந்து முன்னணி நகர செயலாளருமான கணேசனிடம் கூறியுள்ளார்.

இதே கேட்டு ஆவேசம் அடைந்த கணேசன், உணவகத்தில் பணியாற்றும் சமையல் மாஸ்டர் ஓம்பிரகாஷ் என்பவரை அழைத்துக்கொண்டு, கறிக்கடையில் இருந்த ரோகித்தை பிடித்து கை, கால்களை கட்டி போட்டு, இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கியபடி ரோட்டில் தரதரவென இழுத்து சென்றுள்ளார்.இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து வாட்ஸ்-ஆப்பில் வைரல் ஆக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார், உணவக உரிமையாளர் தர்சன் (21), இந்து முன்னணி நகர செயலாளர் கணேசன், உணவக சமையல் மாஸ்டர் ஓம்பிரகாஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரும்பு பைப்பால் தாக்கப்பட்ட ரோகித், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Related News