தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு

Advertisement

திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டையை சேர்ந்த கோவிந்தசாமி (ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்). இவரது மகன் ஸ்ரீதர்(29). பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் பெங்களூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அனுசியா(29) பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினரும் இணைந்து காதல் ஜோடிக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, திருத்தணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 15ம் தேதி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில், தாலி கட்டவிருந்த நேரத்தில் மணமகன் ஸ்ரீதர் திருமண மண்டபத்திலிருந்து மாயமானார். இந்த சம்பவம் மணமகள் வீட்டாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் மாயமானதாக அனுசியா காவல் நிலைத்தில் புகார் அளித்தார்.

அனுசியா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருத்தணி போலீசார் மாயமான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தங்கியிருந்த ஸ்ரீதரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து திருத்தணிக்கு அழைத்து வந்தனர். டிஎஸ்பி கந்தன் முன்னிலையில் ஸ்ரீதர் மற்றும் அனுசுயாவுக்கு ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தனர். இதனையடுத்து, போலீசார் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அனுசியாவை திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாத ஸ்ரீதர் மறுநாளே மீண்டும் மாயமானது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் வந்த அனுசியா தனக்கு நீதி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஎஸ்பி கந்தனிடம் கேட்டுக் கொண்டார். காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மறுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காதலனை திருமணம் செய்ய இளம்பெண் 16 நாட்களாக போராடி வரும் சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News