தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முட்டம் துறைமுகத்தில் இருந்து சென்ற விசைப்படகு மீது உரசிய சரக்கு கப்பல்: 22 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Advertisement

குளச்சல்: வெள்ளிச்சந்தை அருகே முட்டம் மீனவர் கிராமத்தில் தனியார் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் கடியப்பட்டணத்தை சேர்ந்த அருள்ரமேஷ் (50) என்பவர் விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை முடிந்து அருள் ரமேசின் விசைப்படகில் கடலில் மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் தயாராகினர். இரவு விசைப்படகு கடலுக்குள் சென்றது. விசைப்படகை முட்டத்தை சேர்ந்த லாரன்ஸ் 35 என்பவர் ஓட்டினார். மேலும் 21 மீனவர்கள் படகில் சென்றனர்.

இதையடுத்து இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் முட்டத்தில இருந்து 22 கடல்மைல் தொலைவில் அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெரிய சரக்கு கப்பல் திடீரென விசைப்படகு மீது உரசிவிட்டு சென்றது. இதனால் விசைப்படகு குலுங்கியதுடன் அதில் இருந்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் விசைப்படகின் பின் பகுதியில் இருந்த கேரஸ் உடைந்து சேதம் அடைந்தது. பின்னர் மீனவர்கள் மீன் பிடிக்காமல் காலை கரை திரும்பினர். தொடர்ந்து விசைப்படகு முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த விசைப்படகை பார்வையிட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விசைப்படகு மீது உரசிவிட்டு நிற்காமல் சென்றது தூத்துக்குடி துறைமுகத்துக்கு செல்லும் சரக்கு கப்பல் என தெரியவந்துள்ளது. மேலும் சரக்கு கப்பல் விசைப்படகின் மீது மோதி இருந்தால் உயிரிழப்பு மற்றும் பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News