தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முசிறி அருகே வீட்டு வாசலில் தூங்கிய வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: போலீசார் விசாரணை

Advertisement

தா.பேட்டை: முசிறி அருகே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத்(26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. சென்னையில் மகள் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்துள்ளார்.

இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் பாலசுப்பிரமணியன் இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள கூரை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்தனர்.

இந்நிலையில் வேலம்பட்டி வயலில் உள்ள வீட்டு வாசலில் நேற்றிரவு கோபிநாத் கட்டிலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு தாய் செல்வி கழிவறைக்கு வெளியே வந்தபோது கட்டிலில் கோபிநாத் எரிந்தவாறு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோபிநாத் கருகி பலியானார்.

தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், எஸ்ஐ முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், தூங்கி கொண்டிருந்த கோபிநாத் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து பெட்ரோல் ஊற்றி கோபிநாத்தை எரித்து கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News