தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நண்பனை கொன்றவர்களை பழிதீர்க்க கொலை திட்டம் தீட்டிய ரவுடிகள் சுற்றிவளைப்பு: தப்ப முயன்ற 3 பேருக்கு எலும்பு முறிவு, கத்தி, கோடாரி உள்ளிட்டவை பறிமுதல்

Advertisement

திருவொற்றியூர்: காசிமேடு திடீர் நகரைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு ரவுடி உலகநாதன். இவரது மனைவி மாலதி, கஞ்சா வியாபாரி. இவர்கள் இருவரும் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோத தகராறில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வல்லரசு, அந்தோணி, எபினேசர், எழிலரசன், மனோஜ், குணசேகரன் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க உலகநாதனின் கூட்டாளிகள் கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ், செல்லதுரை, கிஷோர், ஆகிய 4 பேர், பயங்கர ஆயுதங்களுடன் காசிமேடு திடீர் நகர் பூங்கா அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் கிஷோர், கோபி (எ) வெங்கடேசன், ஆகாஷ் ஆகிய 3 பேரும் மதில்சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றபோது, 3 பேருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர்கள் 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து, மைதானத்தில் பதுங்கி இருந்த செல்லதுரையை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து, 7 கத்தி, 1 கோடாரி, ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News