தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததால் நோயாளிகள் ஓட்டம்

Advertisement

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே டிரோன் பறந்ததாக கூறி நோயாளிகள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் கடந்த ஏழாம் தேதி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் அப்பகுதியில் டிரோன் பறந்ததாக கூறி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதனை கண்டு பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக நினைத்து அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து அங்கு விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் பயன்படுத்தப்பட்டதாகவும் அதனை தவறுதலாக புரிந்து கொண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், பொதுமக்களிடம் விளக்கம் அளித்து, தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனவும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர், யாரும் பயப்பட வேண்டாம் என அறிவுரை கூறினர்.

Advertisement