தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

166 அப்பாவி மக்கள் பலியான மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி!!

Advertisement

வாஷிங்டன் : மும்பை பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ஹூசைன் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. உலகையே உலுக்கிய மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவமானது 2008ல் நடந்தது நினைவிருக்கலாம். கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சிலர் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் தாக்குதலை ஏற்படுத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடக்கம். சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குக்தலில் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் போலிசாரால் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியான பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான தஹாவூர் ஹூசைன் ராணா (63) என்பவரை இந்திய அரசாங்கம் தீவிரமாக தேடிவந்த நிலையில், இவர் கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் தலைமறைவாக இருந்தார்.இந்தியாவால் தேடப்பட்ட குற்றவாளியான தஹாவூர் ஹூசைன் ராணாவை 2009ல் குற்றவழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது அமெரிக்கா. ராணாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரி வந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்க கூடாது என அமெரிக்க அரசே பதில் மனு தாக்கல் செய்தது.

அமெரிக்க அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ராணாவின் நாடு கடத்துவதை தடுக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், அதன் அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுகிறார். ராணா விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது

Advertisement

Related News