தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 கோடி இழப்பு

Advertisement

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 14 காசுகள் சரிந்து முதல் முறையாக 86 ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், அந்நிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவதால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.3%, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 0.4% சரிந்துள்ளன. பெரிய, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 260 நிறுவனங்களின் பங்கு விலை, ஓராண்டின் குறைந்தபட்ச நிலைக்கு சரிந்துவிட்டன. அதேநேரத்தில் சிறு நிறுவனங்களின் பங்குகள் 2%, நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் 2.4% வீழ்ச்சியடைந்துள்ளன.

கட்டுமான நிறுவன குறியீட்டு எண் மற்றும் பொதுத்துறை வங்கி குறியீட்டு எண்கள் தலா 2.7% சரிவடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் 2% குறைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குறியீட்டு எண் மட்டுமே 3.4% அளவுக்கு உயர்ந்துள்ளது. ஐ.டி. தவிர பிற துறை நிறுவன பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களில் பங்கு விலைகள் தொடர் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது

 

 

 

 

 

 

Advertisement

Related News