தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ம.பி., பரோடா, மும்பை, டெல்லி அசத்தல் வெற்றி: உறுதி ஆனது அரையிறுதி

Advertisement

பெங்களூரு: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 லீக் போட்டிகள் நடந்து வந்தன. இதில், மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்தியப்பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரப்பிரதேசம் ஆகிய எட்டு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் காலிறுதிப் போட்டி, மத்தியப்பிரதேசம் - சவுராஷ்டிரா அணிகள் இடையே, கர்நாடகாவின் ஆலுாரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மத்தியப்பிரதேசம் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய மத்தியப்பிரதேசம் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 33 பந்தில் 38 ரன் குவித்து, 2 விக்கெட்டும் வீழ்த்திய ம.பி.யின் வெங்கடேஷ் ஐயர் ஆட்ட நாயகன்.

பெங்களூருவில் நடந்த மற்றொரு காலிறுதியில் பரோடா- பெங்கால் அணிகள் மோதின. முதலில் ஆடிய பரோடா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின் பேட்டிங் செய்த பெங்கால் அணி 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன் மட்டுமே எடுத்து, 41 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பரோடா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பரோடாவின் லுக்மன் மெரிவாலா ஆட்ட நாயகன்.ஆலுாரில் நடந்த 3வது காலிறுதியில் விதர்பா - மும்பை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய விதர்பா அணி அபாரமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்தது.

இதையடுத்து, 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை களமிறங்கியது. துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 49, அஜிங்க்யா ரஹானே 84 ரன் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். 19.2 ஓவர் முடிவில், மும்பை அணி 4 விக்கெட் இழந்து 224 ரன் குவித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால், மும்பையும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 84 ரன் குவித்த ரஹானே ஆட்ட நாயகன்.பெங்களூருவில் நடந்த 4வது காலிறுதியில் டெல்லி, உத்தரப்பிரதேச அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. பின்னர், 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. களமிறங்கியது. துவக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய உ.பி. வீரர்கள், 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். 19 ரன் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்ட நாயகன் அனுஜ் ராவத். அரை இறுதிப் போட்டிகள் பெங்களூருவில் நாளை நடக்கின்றன. முதல் அரையிறுதியில் பரோடா - மும்பை அணிகள், 2வது அரை இறுதியில் டெல்லி - ம.பி., அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி 15ம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ளது.

Advertisement

Related News