தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி மும்பை பள்ளி மாணவி சாதனை

Advertisement

ஜாம்ஷெட்பூர்: மும்பை கடற்படை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருபவர் காம்யா கார்த்திகேயன் (16). இவரது தந்தை கார்த்திகேயன் கடற்படையில் கமாண்டர் ஆக உள்ளார். இவர் சிறு வயதில் இருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறி ஏற்கனவே, பல சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியாவில் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் அறக்கட்டளை மாணவி காம்யா கார்த்திகேயனின் முயற்சிகளுக்கு ஊக்கம் அளித்தது. எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கான பயணத்தை கடந்த மார்ச் மாத இறுதியில் அவர் தொடங்கினார்.

7 வார கால பயணத்துக்கு பின்னர் மே 20ம் தேதி எவரெஸ்ட் மலையில் 8848 மீ உச்சியை காம்யாவும், கமாண்டர் கார்த்திகேயனும் அடைந்தனர். இதன் மூலம் எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்த 2வது இளம் பெண் மற்றும் இந்தியாவின் முதல் இள வயது பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார் என மேற்கு பிராந்திய கடற்படை டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 7 கண்டங்களில் மிக உயரமான சிகரங்களை காம்யா ஏறியுள்ளார். வரும் டிசம்பரில் அன்டார்ட்டிகாவில் உள்ள மிக உயரமான வின்சன் மாசிப் சிகரத்தில் ஏற உள்ளார். டாடா அட்வென்ச்சர் அறக்கட்டளையின் தலைவர் சாணக்கியா சவுத்ரி,‘‘சிறிய வயதில் இந்த சாதனையை படைத்தற்காக காம்யா கார்த்திகேயனுக்கு பாராட்டுகள். அவர் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement