தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கஞ்சா போதையில் கும்பல் வெறியாட்டம்: வீடு புகுந்து தாய், மகன் உள்ளிட்ட 5 பேருக்கு வெட்டு; ஒருவர் சீரியஸ்

பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் சிவசக்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சந்திரா (52). இவர் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டின் கதவை பூட்டச்சென்றபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர் சந்திராவின் தலையில் வெட்டிவிட்டு பின்னர் அவரது வீட்டுக்குள் புகுந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த சந்திராவின் மகன் ராஜேஷ் என்பவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

Advertisement

இதில் ராஜேஷுக்கு தலை, தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்து ரத்தவெள்ளத்தில் துடித்துள்ளார். சந்திரா, அவரது மகன் ஆகியோரின் கதறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் தாக்குதல் நடத்திய கும்பல் பைக்குகளில் தப்பிச்சென்றுவிட்டது. இதன்பிறகு தாய், மகன் ஆகியோரை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “ஆகாஷ் என்பவரை தேடி வந்ததாகவும் அவர் இல்லை என்று தெரிந்ததும் சந்திரா, அவரது மகன் ராஜேஷ் ஆகியோரை வெட்டிவிட்டு சென்றுள்ளனர்’ என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே அந்த கும்பல், கொளத்தூர் கிரிஜா நகர் மெயின் ரோடு பகுதிக்கு வந்தபோது கொளத்தூர் மேட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் (35), அவரது நண்பர்கள் தமிழ்ச்செல்வன் (26), மனோஜ்கிரண் (32), விஷால் ஆகியோர் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த கும்பல் அவர்களையும் வெட்டியுள்ளனர். இதில் கார்த்திக், தமிழ்ச்செல்வனுக்கு தலையில் பலத்த வெட்டு ஏற்பட்டு இருவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில், கார்த்திக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்திய கும்பல் அமாவாசை, விக்கி, சின்ன கருப்பு, பெரிய கருப்பு மற்றும் ஜீவா என்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் கஞ்சா போதையில் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News