தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை பொருள் இளைஞர்களை தட்டிகேட்டதால் பீகாரில் தாய், மகள் சுட்டுக் கொலை: தந்தை படுகாயத்துடன் அட்மிட்

Advertisement

பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் வசிக்கும் தனஞ்செய் மேத்தா குடும்பத்தினரின் வீட்டிற்கு அருகே, சில இளைஞர்கள் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை அவரது மனைவி மகாலட்சுமி பலமுறை தட்டிக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறுகள் ஏற்பட்டுள்ளன.சமீபத்தில் ஏற்பட்ட தகராறின்போது, தனஞ்செய் மேத்தாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

இதற்குப் பழிவாங்கும் நோக்கில் இருந்த அந்த இளைஞர்கள், நேற்று தனஞ்செய் மேத்தாவின் மனைவி மகாலட்சுமி மற்றும் அவர்களது 19 வயது மகள் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டனர். சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். காலில் குண்டு பாய்ந்த தனஞ்செய் மேத்தா, பாட்னாவின் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலை நேரில் கண்ட சாட்சியான தனஞ்செய் மேத்தா, மருத்துவமனையில் இருந்தபடியே காவல்துறைக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தத் தாக்குதலானது முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பீகாரில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்ற எதிர்க்கட்சியினர், முதல்வர் நிதிஷ் குமார் அரசைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

Advertisement

Related News