தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும் ஒரு கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவு: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

Advertisement

டெல்லி: நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும் ஒரு கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவு அளித்துள்ளார் என மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு வைத்துள்ளார். பிரிவினையை விதைக்கும் கட்சிக்கு ஆதரவு அளித்து கொண்டு இந்துக்களே ஒன்று படுங்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவதிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக பதிலளித்துள்ளார்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகள் அரங்கேறுவதாக மோகன் பகவத் குற்றம்சாட்டியிருந்தார். இந்துக்களுக்கு எதிரான அட்டுழியங்களை செய்வது வங்கதேசத்தில் தொடர்கதை ஆவதாகவும் எனவே இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாட்டுக்குள் பிரிவினையை விதைக்கும் ஒரு கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவளிக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மோகன் பகவத் ஆதரிக்கும் கட்சி இந்திய அரசியலமைப்பை மாற்றும் பணியை தொடங்கி இருக்கிறது என்றும் இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டும் வேலையை செய்கிறது என்றும் கார்கே சாடியுள்ளார். இதே போல் காங்கிரஸ் கட்சி நகர்ப்புற நக்சல்களால் கையகப்படுத்தப்பட்டு விட்டது என்று பிரதமர் மோடி கூறியிருக்கும் கருத்துக்கு பதிலளித்த கார்கே முற்போக்குவாதிகளை நகர்ப்புற நக்சல்கள் என்பது மோடியின் வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவே ஒரு பயங்கரவாத கட்சி என்று குறிப்பிட்டிருக்கும் கார்கே பட்டியல் சாதிகளை சேர்ந்தவர்களின் வாயில் சிறுநீர் கழிப்பது, பழங்குடியினரை பாலியல் வன்முறை செய்வது போன்ற செயல்களை பாஜகவினர் செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Advertisement

Related News