தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மோடியின் வீரத்தை பார்த்து பயந்து டிரம்ப் வரியை குறைக்கிறாராம்: சொல்கிறார் நயினார்

பட்டுக்கோட்டை: பிரதமர் மோடியின் வீரத்தை பார்த்து பயந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வரியை குறைக்க இருப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜ சார்பில் நேற்றிரவு பிரசாரம் நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ேபசியதாவது:கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.16 லட்சம் கோடியை தந்தது பிரதமர் மோடி என்பதை யாரும் மறந்து விட முடியாது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பிரதமர் மோடி. முன்பெல்லாம் இந்தியா என்றாலே ஏளனமாக, அலட்சியமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போது இமிகிரேசன் ஆபீசில் நமது பாஸ்போர்ட்டை நீட்டினால் இந்தியாவா என்று யாரும் கேட்பதில்லை. மோடியா, மோடியா என்று கேட்கிறார்கள்.

Advertisement

இஸ்ரேல் பிரச்னையில் பிரதமர் மோடி பேசியதை பார்த்து இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி போட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதை பற்றி கவலைப்படாமல் இந்திய பொருட்களை அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு மோடி அனுப்பினார். அதன் விளைவாக இந்தியாவிலிருந்து வரும் எல்லா பொருட்களுக்கும் 50 சதவீதத்திலிருந்து வரியை குறைக்க போகிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார். அப்படியென்றால் பிரதமர் வீரத்துடன், விவேகத்துடன், தைரியத்துடன் செயல்படுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

Advertisement

Related News