Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

6 வயது சிறுமி பலாத்காரம் 2 பேருக்கு 58 ஆண்டு சிறை தண்டனை

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒல்லுகரை பகுதியை சேர்ந்தவர் சமல்(32). இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் சூரியதேவ் (27). நண்பர்களான 2 பேரும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி கோட்டயம் அருகே உள்ள மூவாற்றுபுழாவை சேர்ந்த 6 வயது சிறுமியை வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மூவாற்றுபுழா போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மூவாற்றுபுழா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் குற்றவாளிகளான சமல், சூரியதேவ் ஆகியோருக்கு 58 வருடம் கடுங்காவல் சிறையும், தலா ரூ. 3.75 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத் தொகையில் ரூ.4 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.