தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண் நண்பரை மரத்தில் கட்டி போட்டு சிறுமி கூட்டு பலாத்காரம்: ஒடிசாவில் நடந்த கொடூரம்

 

Advertisement

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆண் நண்பரை மரத்தில் கட்டி வைத்துவிட்டு 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் ஒதுக்குப்புறமான கால்வாய் சாலைப் பகுதியில், கடந்த 10ம் தேதி இரவு 8 மணியளவில் 17 வயதுடைய சிறுமி தனது 17 வயது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள், அந்தச் சிறுவனைத் தாக்கி வாயை அடைத்து அங்கிருந்த மரத்தில் கட்டிப் போட்டனர். பின்னர் கண்முன்னே அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த கும்பல், அவரிடமிருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், ஆண் நண்பரிடமிருந்த பணத்தையும் பறித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் பயம் காரணமாக முதலில் நகை பறிப்பு வழக்கு மட்டுமே பதிவு செய்த நிலையில், பின்னர் 1-ம் தேதி தான் சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கை மாற்றிய போலீசார், தீவிர விசாரணை நடத்தி நேற்று குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவன் ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைதாகி சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வீடியோ பதிவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும் இக்குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News