தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் தகவல்: 2,553 டாக்டர் பணியிடங்களுக்கு 27ல் தேர்வு

Advertisement

சென்னை: சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி:

வருகின்ற 14 மற்றும் 15ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1271 செவிலியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரந்தர பணி நியமன ஆணைகள் தரப்படவிருக்கிறது.

27ம் தேதி 2553 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு 24,000 மருத்துவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறவிருக்கிறது. பெரிய அளவில் காலிப்பணியிடங்கள் மருத்துவத்துறையில் உள்ளது போன்ற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு 38 வழக்குகள், இந்த வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு விரைவில் தேர்வு நடத்துவதற்குரிய பணிகளை தொடங்கியிருக்கிறோம். 2250 கிராம சுகாதார பணியிடங்களை நிரப்புவதற்கு உச்சநீதிமன்றம் வரை 30க்கும் மேற்பட்ட வழக்குகள், இந்த வழக்குகள் தீர்க்கப்பட்டு விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள பணியிடங்களை மாநகராட்சி நிர்வாகம் நிரப்ப உள்ளது என்றார்.

இந்நிகழ்வில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணை வேந்தர் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement