தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சி வைரல்

Advertisement

இடைப்பாடி: குடிபோதையில் நடுரோட்டில் சாவகாசமாக கால் மீது கால் போட்டபடி படுத்திருந்த மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் மீது, டேங்கர் லாரி ஏறியதில் தலை நசுங்கி பலியானார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர் (22). மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர். திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வீட்டுக்கு பஸ்சில் வந்துள்ளார். கள்ளுக்கடை பகுதியில் இறங்கி டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். இரவு 10 மணியளவில், போதை தலைக்கேறிய நிலையில், ரோட்டில் நடந்து சென்றபோது, தடுமாறி விழுந்துள்ளார். அங்கேயே போதை மயக்கத்தில் படுத்துக்கொண்டார்.

நடுரோட்டில் கால் மேல் கால் போட்டு ஹாயாக வீட்டில் படுத்திருப்பதுபோல படுத்திருந்தார். இரவு நேரம் என்பதால், சாலையில் அவர் படுத்திருப்பது அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை. அப்போது இடைப்பாடியில் இருந்து, மேட்டூர் சென்ற டேங்கர் லாரி, நடுரோட்டில் படுத்திருந்த சங்கர் மீது ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து டேங்கர் லாரி டிரைவரான பவானி அம்மாபேட்டையை சேர்ந்த மாதையன்(50) என்பவரை கைது செ்யதனர். டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்தனர். போதையில் நடுரோட்டில் படுத்திருக்கும் சங்கர் தலை மீது டேங்கர் லாரி ஏறிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement