தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாளுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது

Advertisement

*சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே 4 நாட்களுக்கு பின்னர் மலை ரயில் சேவை துவங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த 18ம் தேதி கல்லாறு-அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் ரயில் பாதையில் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மலை ரயில் சேவையை ரத்து செய்து அறிவித்தது.

தண்டவாள சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முழுமையாக முடிவடைந்து ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த 184 பயணிகள் மலை ரயிலில் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். 4 நாட்களுக்குப்பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement