தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும்: நிர்வாகத்திடம் கோரிக்கை மனு

Advertisement

திருவொற்றியூர்: மெட்ரோ ரயில்களை அதிகாலை 4 மணி முதல் இயக்க வேண்டும் என்று திருவொற்றியூர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் அலுவலர்கள் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் இதில் பயணிக்கின்றனர். இதில் அனைத்து பகுதியில் இருந்தும் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களுக்கு வந்தே பாரத் மற்றும் பல்வேறு விரைவு ரயில்கள் காலை 5 மணிக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்க மாநகரப் பேருந்து மற்றும் மின்சார ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால் சொந்த வாகனம் அல்லது கார் டாக்ஸி, வாடகை ஆட்டோ போன்ற வாகனங்களில் பொதுமக்கள் பயணித்து ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமத்தைப் போக்க விம்கோ நகர் மட்டுமின்றி சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் இயக்கப்பட வேண்டும் என்று திருவொற்றியூர் நல சங்கத்தின் நிர்வாகிகள் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதற்கான கோரிக்கை மனு மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News