தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்து வழக்கில் திருப்பம் கூலிப்படை ஏவி விவசாயி கொலை மனைவி, மகள் உள்பட 4 பேர் கைது

Advertisement

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே கூலிப்படை ஏவி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி, மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த படதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (55). விவசாயியான இவர் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி ஊத்தங்கரை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பள்ளி அருகில் சாலை விபத்தில் இறந்ததாக கோவிந்தசாமியின் மனைவியும் நாரலப்பள்ளி கிராம உதவியாளருமான மாதேஸ்வரி (49) என்பவர் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து சடலத்தை அவரது மனைவி மாதேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். பிரேதத்தை எடுத்துச் சென்று அவரது நிலத்தில் அடக்கம் செய்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கோவிந்தசாமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணயில் கோவிந்தசாமியை தலையில் அடித்துக்கொன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் போட்டுச்சென்றது தெரியவந்தது. இறந்துபோன கோவிந்தசாமியின் மனைவி மாதேஸ்வரி மற்றும் அவரது மகளும், ரஞ்சித்குமார் என்பவரது மனைவியுமான சரண்யா (23) ஆகிய இருவரும் கூலிப்படை அமைத்து கொலை செய்து சாலையில் போட்டது தெரிய வந்தது.

சாமல்பட்டியை சேர்ந்த வேல்முருகன் (29), பெரியதள்ள பாடியை சேர்ந்த பிரசாந்த் (30), ஊத்தங்கரையை சேர்ந்த சிவகாசி குமார் (23), முஷராப், நந்து ஆகியோர் சேர்ந்து கிரிக்கெட் பேட்டால் தலையின் பின்பக்கம் அடித்து கொலை செய்து சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும், அதனால் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி இறந்து போனதாக நாடகம் ஆடியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

மாதேஸ்வரியிடம் விசாரித்தபோது,`தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னுடன் தகராறு செய்து அடிப்பார். அதுபற்றி சாமல்பட்டி போலீசில் புகார் செய்தபோது போலீசார் குடும்ப சண்டைக்காக போலீஸ் நிலையம் வரவேண்டாம்; பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என கூறினர். இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தனர்.

அதன்பிறகும் தன்னை கணவர் அடித்து துன்புறுத்தி வந்தார். அதனால் பெரியதள்ளபாடியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் 20 ஆயிரம் கொடுத்து கை, காலை உடைத்து போடுமாறு சொன்னதாகவும், அவர்கள் கொலை செய்வார்கள் என நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மாதேஸ்வரி, அவரது மகள் சரண்யா, வேல்முருகன், சிவகாசி குமார் ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான பிரசாந்த், முஷராப், நந்து ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Related News