தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மெஹ்ரொலி இரும்புத்தூண் தெற்கு டெல்லி

உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து பல ஆண்டுகளாக வியப்பில் ஆழ்த்தியுள்ளது டெல்லியிலுள்ள இரும்புத்தூண். ஏனெனில் இத்தூண் கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்கக் கூடியதாக உள்ளது.

Advertisement

பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தூண் 23 அடி 8 அங்குலம் உயரமும், 16 அங்குலம் விட்டமும், 6டன் எடை கொண்டதாக உள்ளது. இதில் 98 சதவீதம் தூய இரும்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தெற்கு டெல்லியின் மெஹரொலி என்ற பகுதியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில் இத்தூண் அமைந்துள்ளது.

இவ்விரும்புத்தூணில் உள்ள மர்மத்தை ஐஐடி கான்பூர் (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி) உலோகவியல் நிபுணர்கள் 2002ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தனர். இவர்கள் இத்தூணில் மிசவேட் என்ற இரும்புக் கலவையிலான மெல்லிய அடுக்கு உள்ளதை கண்டறிந்தனர். மேலும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இரும்பைத் துருவிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள உயர் அளவு பாஸ்பரஸ் நல்ல வினையூக்கியாகச் செயல்படுகிறது. இரும்பு உருவாக்கும் முறைகளில் இது தனிப்பட்ட முறையாக கருதப்படுகிறது. பயிற்சி பெற்ற பண்டைக் கால இந்திய கொல்லர்களால் இரும்பு எஃகு மற்றும் கரியினைக் கொண்டு நவீன ஊதுலைகளில் உற்பத்தி செய்த கலவையினைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். பின்பு சுண்ணாம்பு மற்றும் கரி இவற்றில் உள்ள கசடு ,ஈயம் போன்ற உலோகம் இவற்றின் மூலம் தூண் மூடப்பட்டு உள்ளது. இதில் உள்ள கசடில் இருந்து பாஸ்பரஸ் மிகுதியாக பெறப்படுகிறது. வட இந்தியாவை ஆட்சி செய்த குப்தர்களின் (கி.பி 320-கி.பி 540) வம்சாவளி வந்த சந்திரகுப்த இரண்டாம் விக்ரமாதித்தன் என்பவரால் கி.பி(375-414)ல் நிறுவப்பட்டது. இத்தூணில் பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட தகவலின் மூலம் விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது என அறிய முடிகின்றது.

Advertisement