தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக போலி கணக்கு சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி சொத்துகள் முடக்கம்

Advertisement

* சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு குறைந்த விலையில் பங்குகள் விற்பனை செய்தது போல போலி கணக்கு காட்டி, ஜெர்மன் நிறுவனத்திற்கு பங்குகளை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் பல கோடிக்கு ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த நிறுவனம் சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ‘ஹெர்ம்ஸ் ஐ டிக்கெட்’ என்ற தனியார் நிறுவனத்தின் பங்குகளை ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வாங்கியது. ஆனால் வாங்கிய பங்குகளை மொரீஷியஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குறைந்த விலையில் பங்குகளை விற்பனை செய்தது போல் வருமான வரித்துறையில் கணக்கு காட்டியுள்ளது.

அதேநேரம் அந்த பங்குகளை மொரீஷியஸ் நாட்டு நிறுவனத்திற்கு விற்காமல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு தனது பங்குகளை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. பங்குகளை விற்பனை செய்த பணத்தை இந்தியாவிற்கு கணக்கு காட்டாமல், அந்த பணத்தை, ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறி ஐக்கிய அரபு நாட்டில் உள்ள 2 தனியார் நிறுவனங்களில் ரூ.195 கோடி பணத்தை சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வந்த புகாரின் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை வைத்து ஆய்வு செய்த போது, சட்டவிரோதமாக ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள 2 நிறுவனங்களில் ரூ.195 கோடி முதலீடு செய்தது உறுதியானது. அதனை தொடர்ந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜி.ஐ.ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.195 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News