பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த மவுலானா இக்பால் தீவிரவாதியா?; ஜம்மு காவல்துறை விளக்கம்
Advertisement
இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை, “பூஞ்ச் நகரில் உயிரிழந்த மவுலானா இக்பால் தீவிரவாதி அல்ல. அவர் உள்ளூர் மக்களால் மதிக்கப்படும் ஒரு மதத்தலைவர். அவருக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்புடனும் தொடர்பில்லை. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களில் தவறான தகவல்களை பரப்புவது பீதியை ஏற்படுத்துவதுடன், இறந்தவரின் கண்ணியத்தையும், துயரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரின் உணர்வுகளையும் அவமதிக்கிறது. இதுபோன்ற போலி செய்திகளை வௌியிடும் எந்தவொரு ஊடகம், சமூக வலைதளம் அல்லது தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisement