தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிகாரிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே பாகிஸ்தான் பெண்ணை மணந்தேன்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் பேட்டி

Advertisement

ஜம்மு: ஜம்முவை சேர்ந்த முனீர் அகமது ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்)படையில் பணிபுரிந்து வந்தார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த மினல் கான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு வீடியோ அழைப்பில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு மினல்கான் இந்தியாவிற்கு வந்தார். பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற அரசு உத்தரவிட்டது. அப்போது தான் சிஆர்பிஎப் வீரர் முனீர் அகமது பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், முனீர் அகமது நேற்று கூறுகையில்,‘‘பாகிஸ்தானில் உள்ள எனது உறவுக்காரபெண்ணை திருமணம் செய்வதற்கான அனுமதியை சிஆர்பிஎப் தலைமையகத்திடம் கேட்டுப் பெற்றேன். அப்போது என்னிடம் இதற்கு எந்தவித தடையில்லா சான்றிதழும் தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். இதற்காக எனது தரப்பில் அனைத்து விதமான ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். எனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், திருமண சான்று உள்ளிட்டவற்றையும் நான் சமர்ப்பித்துள்ளேன். சட்டத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

 

Advertisement