தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்: எம்எல்ஏ பங்கேற்பு

Advertisement

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் கிராம மக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்ற கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து திருமணம் ஊராட்சியில் பொது நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு திமுக ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தேசிங்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயஸ்ரீ லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா வீரன் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சாக்ரடீஸ், ஒன்றிய பொருளாளர் சுகுமார், மாவட்ட பிரதிநிதி கந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரெகானா பேகம், ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் பாலாஜி, துணைத் தலைவர் நிவேதா பூவரசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News