தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து: அதிகாரிகளுடன் ஆலோசனை

Advertisement

ஜிரிபாம்: மணிப்பூரில் நடக்கும் வன்முறையால் ஒன்றிய உள்துறை அமித் ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால், அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பதட்டங்கள் அதிகரித்துள்ளதால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்று மாநில அமைச்சர் உட்பட பாஜக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.

இருப்பினும், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் கலவரக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர். அதனால் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது தேர்தல் பிரசார பேரணிகளை ரத்து செய்தார். டெல்லியில் அவர் மணிப்பூரில் நடக்கும் போராட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement