தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலில் இருந்து திடீரென கரை ஒதுங்கும் ராட்சத குழாய்கள்: மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் சிறிய படகு மீனவர்கள் தவிப்பு

Advertisement

மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள நெம்மேலி கடற்கரையில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பெரிய குழாய்கள் கடல் சீற்றம் காரணமாக திடீரென கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாமல்லபுரம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் உள்ளது. இந்த நிலையம் 2013 முதல் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. திருவான்மியூர், பெருங்குடி மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க இது உதவுகிறது.

இந்த நிலையில், கடல் நீரை குடிநீராகும் திட்டத்திற்கு கடலில் நிலைத்நிறுத்தப்பட்டு பயன்படுத்தக்கூடிய ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ராட்சத குழாய் என்பது தெரிய வந்தது. இந்த குழாய்கள் சுமார் 1500 மீட்டர் நீளம் கொண்டவை, குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஜே.சி.பி. உதவியுடன் அவற்றை கரையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் கடல் சீற்றம் காரணமாக அந்த பணிக்கு சிரமம் ஏற்பட்டது. நெம்மேலி கடற்கரையில் இந்த குழாய்கள் கடலில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு பதிக்கப்பட்டிருந்தன. இக்கருவி மூலம் குடிநீரை குடிநீராக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இத்தகைய ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியதால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News