தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயசூர்யா, முகேஷ் எம்எல்ஏ உள்பட 4 நடிகர்கள் மீது கொடுத்த பலாத்கார புகார் வாபஸ்: மலையாள நடிகை அறிவிப்பு

Advertisement

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் பிரபல நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பலர் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன. எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த மினு முனீர் என்ற நடிகை முன்னணி நடிகர்களான ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு மற்றும் நடிகரும், மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது பலாத்கார புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை மினு முனீர் தன்னுடைய உறவினரின் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது தான் கொடுத்த பலாத்கார புகாரை வாபஸ் பெறப்போவதாக நடிகை மினு முனீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர்கள் மீது நான் கொடுத்த புகார் தொடர்பாக கேரள அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. என் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கின் உண்மைத் தன்மையை அரசு நிரூபிக்க தவறிவிட்டது. இந்த சூழ்நிலையில் நான் நடிகர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் கடிதம் கொடுத்தால் மட்டும் புகாரை வாபஸ் பெற முடியாது என்று சிறப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். அரசுதான் வாதி. புகார்தாரர் முக்கிய சாட்சி ஆவார். மேலும் புகார்தாரர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகும் போது தான் வழக்கை வாபஸ் பெறுவது குறித்து நீதிமன்றத்தில் கூற முடியும். என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News