தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மராட்டிய பேரவை தேர்தல் : கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளராக களம் இறங்கிய மேலும் 16 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

Advertisement

மும்பை : மராட்டிய மாநில பேரவைத் தேர்தலில் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கிய மேலும் 16 பேரை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள மொத்தம் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியில் உள்ள கட்சிகளில் சிலர் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கிய 12 வேட்பாளர்களை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னித்தலா நடவடிக்கை எடுத்தார்.

அத்துடன் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை உடனே வாபஸ் பெறுமாறும் உத்தரவிட்டார். ஆனால் ரமேஷ் சென்னித்தலாவின் எச்சரிப்பிற்கு செவிச் சாய்க்காத மேலும் 16 பேரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலி நடவடிக்கை எடுத்துள்ளார். இதே போல் உத்தவ் தாக்கரே கட்சியிலும் 6 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் உட்கட்சியில் கலகம் விளைவித்து போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் உட்பட மொத்தம் 40 பேரை அந்த கட்சியும் 6 ஆண்டுகளுக்கு நீக்கி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் 30 பாஜக போட்டி வேட்பாளர்கள் அல்லது அதிருப்தியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News