மராட்டிய பேரவை தேர்தல் : கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளராக களம் இறங்கிய மேலும் 16 பேர் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்
Advertisement
அத்துடன் கொறடா உத்தரவை மீறி போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை உடனே வாபஸ் பெறுமாறும் உத்தரவிட்டார். ஆனால் ரமேஷ் சென்னித்தலாவின் எச்சரிப்பிற்கு செவிச் சாய்க்காத மேலும் 16 பேரை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலி நடவடிக்கை எடுத்துள்ளார். இதே போல் உத்தவ் தாக்கரே கட்சியிலும் 6 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பாஜகவில் உட்கட்சியில் கலகம் விளைவித்து போட்டி வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தவர்கள் உட்பட மொத்தம் 40 பேரை அந்த கட்சியும் 6 ஆண்டுகளுக்கு நீக்கி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலும் 30 பாஜக போட்டி வேட்பாளர்கள் அல்லது அதிருப்தியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement