தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்: காங். செயற்குழுவில் கார்கே பேச்சு

Advertisement

புதுடெல்லி: கட்சி அமைப்பை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா,அரியானா சட்ட பேரவை தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.இதில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே,‘‘ அடிமட்டத்தில் இருந்து கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் பொறுப்பு கூறலை கட்டாயமாக்க வேண்டும்.அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பகிரங்கமாக வெளியே பேசக்கூடாது. தேர்தல் நடந்த 4 மாநிலங்களில் இந்தியா கூட்டணி 2 மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் தேர்தலில் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கிறது.

எதிர்காலம் மிகவும் சவாலாக உள்ளது. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நமது பலவீனங்களை சரி செய்து கட்சி அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை களைய கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகின்றன. பூத் அளவில் இருந்து கட்சி அமைப்பை பலப்படுத்துவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் இருந்து வாக்கு எண்ணிக்கை இரவும் பகலும் நாம் இரவும் பகலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

Advertisement