Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் செயற்கை பன்னீர் தடை!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் பாலுக்குப் பதிலாக தாவர எண்ணெய் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'அனலாக் பன்னீர்' (செயற்கை பன்னீர்) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள், இந்த செயற்கை பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீராகப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் சிறைத் தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், ₹10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சத்தீஸ்கருக்கு அடுத்தபடியாக, இத்தகைய தடையை அமல்படுத்தும் இரண்டாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது.