தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதி சிறகுகள் தொழில் மையத்தில் தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Advertisement

திருவள்ளூர்: மகளிர் சுய உதவிக் குழுவினர் மதி சிறகுகள் தொழில் மையத்தில் பதிவு செய்து தொழில் தொடங்கி பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு உதவி, மதி சிறகுகள் தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும், ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் ஊரக மகளிர் தொழில் முனைவுகனை மேம்படுத்துதல், நிதி சேவைக்கு வழி வகுத்தல் மற்றும் சுய தொழில் வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய வட்டாரங்களில் 198 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு தொழில் திட்டம் தயாரித்தல், மதிப்பீடு செய்தல், தொழில்நுட்ப விபரங்கள் அளித்தல், திறன் வளர்ப்பு குறித்த விபரங்கள் அளித்தல், சந்தை இணைப்பு ஏற்படுத்துதல் ஊரக தொழில் முனைவோர்கள் புதிய தொழில் துவங்குவதற்கும் (அ) தொழிலை மேப்படுத்துவதற்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக மதி சிறகுகள் தொழில் மையம் என்ற ஓரிட சேவை மையத்தை அமைத்து சேவைகளை வழங்கி வருகிறது.

தற்போது இம்மையத்தின் மூலம் இ - சேவை மையம் சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்காணும் சேவைகளை இம்மையத்தை அணுகி மகளிர் உதவிக் குழு உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவைகளைப் பெற மீஞ்சூர், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் மதி சிறகுகள் தொழில் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும் அலைபேசி எண் : 8939009163, 8825769032 என்றஎண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் இவ்வாறு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

Related News