தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய பிரதேசத்தில் வசிக்கும் கணவரின் 2வது திருமணத்தை தடுங்க மோடி ஐயா... பாகிஸ்தான் பெண் உருக்கமான வீடியோ வெளியீடு

இந்தூர்: இந்தியாவில் வசிக்கும் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்ய முயல்வதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரதமர் மோடியிடம் நீதி கேட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்பவரும், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் விக்ரம் நாக்தேவ் என்பவரும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கராச்சியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இந்தியா வந்த நிகிதாவை, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூலை 2020ல் விக்ரம் கட்டாயப்படுத்தி மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்ததுடன், கராச்சியிலேயே தவிக்க விட்டுத் தொடர்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், தன்னை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமலேயே டெல்லியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை விக்ரம் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பது நிகிதாவுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிரதமர் மோடியிடம் நீதி கேட்டு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும்’ என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்தூரில் உள்ள பஞ்சாயத்து மற்றும் சட்ட ஆலோசனை மையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, விக்ரமை நாடு கடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், இந்தூர் மாவட்ட ஆட்சியரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Related News