தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுராந்தகம் சுற்று வட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரமான நல்ல தண்ணீர் குளம் பாழாகும் அபாயம்: வேலி அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்

 

Advertisement

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் தொன்னாடு ஊராட்சியில் 6 ஏக்கர் பரப்பளவில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் மன்னர் காலத்தில் கிராமத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளக்கரையை சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தக் குளத்தின் நீரை அப்பகுதி மக்கள் பல தலைமுறையாக குடிநீருக்காகவும், உணவு சமைக்கவும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் நீரை இந்த நவீன யுகத்திலும் கிராம மக்கள் இன்றுவரை அப்படியே கையில் மொண்டு குடிக்கின்றனர். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் இந்த நீரை குடிக்க பழகி வைக்கின்றனர். இதனால் குடிநீராக பயன்படும் இந்த குளத்திற்கு அந்நியர்கள் வேறு யாரும் வந்து செல்லாதவாறு சுற்றி வேலி கம்பிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நல்ல தண்ணீர் குளம் அந்த கிராமத்தின் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் மலை குன்றின் மீது பெய்யும் மழை நீரானது அந்த மலையில் உள்ள மூலிகைகளின் கலந்து இந்த குலத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் அப்படியே குடிப்பதால் சளி, காய்ச்சல், உடல் சூடு உள்ளிட்ட வியாதிகள் விரைவாக குணமடைவதாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் நல்ல தண்ணீர் குளத்து நீரில் சமைத்தால் சமையல் செய்த சாதம் விரைவாக கெட்டுப் போகாது என்று சுற்று வட்டார மக்கள் நம்புகின்றனர். குழம்பு மற்றும் உணவு வகை சுவையாக உள்ளதால் பல தலைமுறையாக இந்த குளத்தின் நீரை சமையலுக்கு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்நியர்களால் அசுத்தம்

தொன்னாடு கிராமத்தில் உள்ள சாலை வழியாக லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் அந்நியர்கள் காலை நேரங்களில் இயற்கை உபாதை கழித்துவிட்டு இந்த குளத்தை அசுத்தம் செய்கின்றனர். மேலும் பலர் இறங்கி கை, கால் கழுவுவது உள்ளிட்ட அநாகரிக செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

வற்றாத குளம்

நல்ல தண்ணீர் குளத்தின் சனிமூலை பகுதியில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றி சிவலிங்கம் வெளியே தெரிந்தால் அந்த பகுதியில் உடனடியாக மழை பெய்து சிவலிங்கம் மூழ்கும் என்பது ஐதீகம். இதனாலே இந்த குளம் வற்றியதே இல்லை என்பது அப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Advertisement

Related News