தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமூல் பெறுவதை அதிகாரிகளிடம் தெரிவித்த கார் டிரைவருக்கு பெண் இன்ஸ்பெக்டர் சரமாரி செருப்படி

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாணதுர்கா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசினாபானு(35). இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார். அந்த காரில் தினசரி போலீஸ் நிலையத்திற்கு வருவது வழக்கம். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த நானி(27) என்பவர் டிரைவராக பணிபுரிகிறார். நானிக்கு அங்கிருந்த அனைத்து போலீசாரும் பழக்கம் என்பதால் அவர்களது சொந்த வேலைகளையும் சேர்த்து செய்து வந்தார்.

இதனிடையே இன்ஸ்பெக்டர் ஹசினாபானு பலரிடம் தனது டிரைவர் நானியை அனுப்பி மாமுல் வாங்கி வர செய்வாராம். ஆனால் இதற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இன்ஸ்பெக்டர் ஹசினாபானுவின் தொந்தரவால் அந்த மாமூல் வாங்கி வந்துள்ளார். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன் கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது. இதை ஹசினாபானு மடக்கி பிடித்தார். அவற்றை விடுவிக்க சில லட்சங்களை பெற்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த டிரைவர் நானி, கலால்துறை உயர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பேரில் நேற்றுமுன்தினம் போலீஸ் நிலையத்திற்கு வந்த உயரதிகாரிகள், ஹசினாபானுவிடம் விசாரித்தனர். தன்னை பற்றி டிரைவர் நானி, ரகசிய புகார் கொடுத்ததை அறிந்து ஆவேசமடைந்த ஹசினாபானு, செருப்பை கழற்றி உயரதிகாரிகள் முன்னிலையில் டிரைவரை `பளார் பளார்’ என அறைந்தார். இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து இணையதளங்களில் வைரலாக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

 

Advertisement

Related News