காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழி பட்டதாரி பெண் எரித்து கொலை: மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு 2 பேரிடம் விசாரணை
சமயபுரம்: திருச்சி அருகே வனப்பகுதியில் பட்டதாரி பெண் எரித்து ெகால்லப்பட்ட விவகாரத்தில், காதலன் தற்கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாவதி(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் மீரா ஜாஸ்மின்(22), எம்எஸ்சி பட்டதாரி.
கடந்த 30ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு செல்வதாக கூறிச் சென்ற மீரா ஜாஸ்மின், எம்.ஆர். பாளையத்தில் உள்ள காப்பு காட்டில் அரை நிர்வாணத்தில் எரிந்த நிலையில் சடலமாக நேற்று முன்தினம் மீட்கப்பட்டார். அருகில் செருப்புகள், 2 பீர் பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், டூவீலர் வந்த தடயங்கள் இருந்தது. இதையடுத்து லால்குடி போலீசார் நடத்திய விசாரணையில், மீரா ஜாஸ்மின் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்எஸ்சி கணிதம் சமீபத்தில் படித்து முடித்தார். இதற்காக அவர் திருச்சி சீனிவாச நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தாயுடன் தங்கி இருந்தார்.
அப்போது, தோழியின் அண்ணன் ஒருவரை மீரா ஜாஸ்மின் காதலித்ததாகவும், திடீரென அவருடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அந்த காதலனின் பிறந்த நாளான அக்.30ம் தேதிதான் மீரா ஜாஸ்மின் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனால் பழிக்குப்பழியாக காதலனின் உறவினர்கள் இளம்பெண்ணை கடத்தி கொன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. அரை நிர்வாண நிலையிலும், பிறப்பு உறுப்பு பெட்ரோல் ஊற்றி எரித்து சிதைக்கப்பட்டு இருந்ததாலும் கூட்டு பலாத்காரம் செய்து தடயத்தை மறைக்க கொடூரமாக கொலை செய்திருக்கலாமா என்றும் விசாரணை நடக்கிறது. மீரா ஜாஸ்மினின் செல்போனை போலீசார் தேடி வருகின்றனர். பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலையடுத்து நேற்று மாலை 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
