உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினர்களாக இணைய மாற்றுத்திறனாளிகள் இன்று முதல் 17ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல்
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி, நகராட்சி மன்றத்திற்கு tnurbantree.tn.gov.in/whatsnew இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு tn.gov.in/dtp அல்லது dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் வரும் 17ம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.