தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஆந்திரா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

Advertisement

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திராவில் குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதித்து 1994ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.

தற்போதயை ஆந்திராவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதேசமயம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தென்மாநில மக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அண்மையில் வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் இனி போட்டியிட முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement