தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லீரல் புற்றுநோயால் சிகிச்சை பெறும்நிலையில் அழகை பற்றி எனக்கு கவலை இல்லை: மகனுக்காக மீண்டு வருவேன் என நடிகை நம்பிக்கை

மும்பை: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை தீபிகா கக்கர், தனது உடல் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆரோக்கியத்தையே முக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகை தீபிகா கக்கருக்கு கடந்த மே மாதம் 2ம் நிலை கல்லீரல் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவருக்கு 14 மணி நேரம் மிக நீண்ட அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது மருத்துவர்கள் அவருடைய கல்லீரலில் பாதிக்கப்பட்டிருந்த 22 சதவீதப் பகுதியை வெற்றிகரமாக அகற்றினர். அதிர்ஷ்டவசமாகப் புற்றுநோய் செல்கள் மற்ற உறுப்புகளுக்குப் பரவாமல் இருந்ததால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார்.

Advertisement

தற்போது புற்றுநோய் மீண்டும் வராமல் தடுப்பதற்காக, அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வாய்வழி மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த சிகிச்சையின் பக்க விளைவாகக் கடும் முடி உதிர்வு மற்றும் தைராய்டு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தாலும், அவர் மன உறுதியுடன் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உடல் எடை அதிகரிப்பதோ அல்லது நான் அழகாகத் தெரியவில்லை என்பதோ எனக்குப் பெரிய குறையே இல்லை; என் கவனம் முழுவதும் என் உடல்நலத்தின் மீதும், என் மகன் ருஹான் மீதும் மட்டுமே உள்ளது’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சிகிச்சையின் வலியையும், மன அழுத்தத்தையும் தாண்டி, தனது கணவர் ஷோயப் இப்ராஹிமின் முழுமையான ஆதரவோடு இந்த நோயை எதிர்த்துப் போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement