Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*பாலை நல்ல சுத்தமான மண்பாண்டக்களில் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது.

*குளிர்ந்த நீரில் ஒரு ஜாடியை நிரப்பி அதில் எலுமிச்சம் பழங்களை போட்டு வைத்தால் எத்தனை நாள் ஆனாலும் கெடாது.

*வெப்பமான இடங்களில் வசிப்பவர்கள் மாமிசத்தின் மேல் சிறிய கரியை பொடி செய்து தூவிவிட்டால் மாமிசம் கெடாது.

*வினிகரில் உப்பைக் கலந்து அதில் மாமிசத்தை போட்டு வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாது.

*மீனின் மேல் உப்பு மற்றும் மஞ்சள் தூளை கலந்து தூவி பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

*முட்டையின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வைத்தால் முட்டை கெடாது.

*பச்சைமிளகாய் காம்பை கிள்ளி வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.

*இஞ்சியை ஒரு இரண்ட, குளிர்ந்த இடத்தில் வைத்தால் ஒரு வாரம்வரை பசுமையாக இருக்கும்.

*பால் காய்ச்சும் பாத்திரத்தின் விளிம்பில் சிறிது கிளிசரினை தடவி விட்டால் பால் பொங்கி வழியாது.

*கீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது.

*கத்திரிக்காயை எப்போதும் காகிதப்பையில் தான் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

*முந்திரிப்பருப்பு பாட்டிலில் சில கிராம்புகளை போட்டு வைத்தால் புழு, பூச்சிகள் வராது.

*வெயில் காலங்களில் முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாது.

- விமலா சடையப்பன்.