தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மது கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

Advertisement

விழுப்புரம்: மது பாட்டில் கடத்தி சென்றவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் விடுவித்த சிறப்பு எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில மதுபாட்டில், சாராயம் கடத்தலை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நடமாடும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் மது, சாராயம் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மது கடத்துபவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு விடுவிப்பதாகவும், மது பாட்டில்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனிடையே கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ காந்திமோகன், ஏட்டு கலையரசன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓசூருக்கு காரில் மது கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் மீது வழக்கு பதியாமல் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு மதுபாட்டில்களுடன் அவர்களை அனுப்பிவிட்டனர். இந்த தகவல் விழுப்புரம் எஸ்பி சரவணன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் விசாரணை நடத்தி சிறப்பு எஸ்ஐ காந்திமோகன், ஏட்டு கலையரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் கடத்தி வந்தவர்கைள பிடித்து அவர்கள் மீது வழக்கு பதியாமல் பணத்தை பெற்றுக்கொண்டு விடுவித்த 3 மதுவிலக்கு ஏட்டுகள் அழகப்பன், காமராஜ், மாதவன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement